தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், விளையாட்டுத் துறைக்குப் பல நலத்திட்டங்கள் மேற்கொண்டு வருகிறார். மேலும், இவரின் முயற்சியால் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து, இவர் தமிழ்நாட்டை விளையாட்டுத்துறைக்கான தலைநகரமாக மாற்றுவதுதான் ஒரே நோக்கம் என அறிவித்திருந்தார்.
அந்தவகையில், ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிகள் சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நடைபெறும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். இவர் வரும் ஜூன் 13 முதல் 17ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்துகொள்ள உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.