தமிழகத்தில் வரும் ஜூன் 1ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்த நிலையில், தற்போது கோடை வெயில் மிக அதிகமாகக் கொளுத்தி வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதில் தாமதமாகலாம் எனக் கூறப்பட்டது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோடை வெயில் காரணமாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் தள்ளி பள்ளிகள் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், தமிழ்நாட்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் எனச் சற்றுமுன் அறிவித்துள்ளார்.