அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையேயான மோதல் நீதிமன்றம் சென்று விட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றைப் பயன்படுத்த மாட்டோம்” என்று உத்தரவாதம் அளித்தார்.
இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி என்.சதீஷ்குமார், “உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறினார்.
இந்த வழக்கு டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்த உத்தரவாதத்தை அடுத்து, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை எந்த தரப்பும் பயன்படுத்த முடியாது.