- Advertisement -
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 3ம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இந்த புயல், வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிசம்பர் 2ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
- Advertisement -