தமிழகப் பகுதியில் உள்ள மேலடுக்கில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று (மே 22) 13 மாவட்டங்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அதைப்போல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல் தமிழகத்தில் நாளை (மே 23) முதல் மே 26ஆம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.