- Advertisement -
தமிழகத்தில் மின்சாரத்துறை, மதுவிலக்கு துறைகளில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அவர்களின் தம்பி அசோக் குமார், நண்பர்கள் வீடுகளில் இன்று (மே 26) காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி தொடர்புடையதாகக் கருதப்படும் அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் நடந்து வருகிறது.
மேலும், இந்த சோதனை குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் இதற்கான காரணத்தைத் தெரிவிக்க மறுத்தனர். இதனால் அங்கு திமுக ஆதரவாளர்கள் வருமான வரி அதிகாரிகளிடம் வாக்குவாதம் ஈடுபட்டனர். மேலும், இது சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -