- Advertisement -
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை மோடி தலைமையில் திறக்கப்பட உள்ளது என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. மேலும், இவ்விழாவிற்குக் குடியரசுத் தலைவர் அழைக்கப்படாததற்கும், அவரை இந்த புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க அனுமதிக்கத்திற்கும் எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்த வழக்கும் இன்று (மே 26) உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சர் சேகர்பாபு அவர்கள், “ இந்த நாடாளுமன்ற கட்டடத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை கொண்டுதான் திறக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. ஏனென்றால், உயர் பதவியில் உள்ள குடியரசுத் தலைவர் திறப்பதுதான் ஏற்புடையதாக இருக்கும் என்பதே முதலமைச்சரின் நிலைப்பாடு என சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்.
- Advertisement -