தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாகச் சிங்கப்பூர், ஜப்பான் கடந்த மே 23ஆம் தேதியில் சென்றார். இதில் முதல்வர் முதலில் சிங்கப்பூரில் பல தலைவர்களையும், பல தொழிலதிபர்களையும் சந்தித்து உள்ளார். மேலும், அவர் அடுத்தாண்டு நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அங்குள்ள சில நிறுவனங்கள் தமிழக அரசுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. பின்னர் நேற்று (மே 25) சிங்கப்பூரிலிருந்து ஜப்பான் சென்றார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
அங்கு ஜப்பானைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவன அதிகாரிகளைச் சந்தித்து, ஜனவரி 2024ல் சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், திருப்போரூரில் இந்த டைசல் நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.