தமிழகத்தில் கடந்த மே 5 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது, வங்கக்கடலில் ஏற்பட்ட மோக்கா புயலால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து பெரிதளவு வெயிலின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில், இந்த புயல் மே 14ல் கரையை கடந்த பின், காற்றில் முற்றிலுமாக ஈரப்பதம் இல்லாததால் கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் சராசரி வெப்பம் நிலையை விட 3 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது.
அதிலிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து 105 மேல் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சலனம் காரணமாக மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று (மே 18) தமிழ்நாட்டின் சில இடங்கள் மற்றும் கடலோர ஆந்திராவில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும் என தகவல் தெரிவித்தனர்