தென்னிந்தியாவில் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட பல விளையாட்டுகள் அவரவரின் மாநிலங்களின் பாரம்பரிய போட்டியாகும். ஆனால், இந்த விலங்குகளை வைத்து விளையாடும் போட்டியை தடை செய்ய வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த பீட்டா அமைப்பு டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அதில் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை எதிர்த்து இவ்வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், விலங்குகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி முறையாக தான் இப்போட்டிகள் நடைபெறுகின்றன என ஆதாரத்துடன் தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் இன்று (மே 18) உச்சநீதிமன்றம் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கிறது.