- Advertisement -
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதையடுத்து பல கல்லூரிகள் தற்போது மாணவர்களை சேர்த்து வருகின்றனர். அதில் மகன் அல்லது மகளை கல்லூரியில் சேர்க்க பல லட்சம் செலவழித்து வேண்டி இருக்கிறது .
இந்த நிலையில், கோவையில் குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க பழைய தங்க நகைகளை நாள் ஒன்றுக்கு சுமார் 10 முதல் 12 கிலோ வரை தங்கம் பெற்றோரால் விற்கப்படுகிறது என தகவல் வந்துள்ளது. மேலும், இது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த பழைய நகைகளை விற்ற வகையில் சுமார் ரூ .6 கோடி வரை வர்த்தகம் நடந்திருப்பதாக தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்தனர்.
- Advertisement -