தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று (நவ .9) முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புப் பேருந்துகள் மூலம், தீபாவளி பண்டிகையைச் சொந்த ஊர்களில் கொண்டாட விரும்பும் பொதுமக்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.
அதன்படி, சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16,895 பேருந்துகளும் இயக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.