- Advertisement -
தீபாவளி முன்னிட்டு தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழக (TANTEA) தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கையால், TANTEA தொழிலாளர்கள் பெரும் நிதி நன்மையைப் பெறுவார்கள் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இணையாக TANTEA பணியாளர்களுக்கும் திருத்தி அமைக்கப்பட்ட தினக் கூலியாக நாளொன்றுக்கு 438 வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால், 212 TANTEA தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது .
தற்போது இந்த போனஸ் நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்க முயற்சிப்பதை வெளிப்படுத்துகிறது.
- Advertisement -