- Advertisement -
தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியான அதிமுகவின் பெயர், கொடி, சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் பதிலளிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் பதிலளிக்கக் குறுகிய கால அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. இதை முன்னிட்டு உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது.
- Advertisement -