- Advertisement -
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் அவர்கள் நேற்று (ஆக .20) மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்துப் பேசினார்.அதில், அவர், “மதுரையில் நடந்தது எழுச்சி மாநாடு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு வீழ்ச்சி மாநாடு. மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்றதாகக் கூறுவது பொய்யான தகவல்” எனக் கூறினார்.
மேலும், அவர் “அவர் என்ன புரட்சி பண்ணாரு? காலில் விழுந்து பதவி வாங்கிட்டு, துரோகம்தான் பண்ணாரு! ‘துரோகத் தமிழர்’ன்னு வேணா அவருக்குப் பட்டம் கொடுக்கலாம்” என எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம் வழங்கப்பட்டது குறித்து டிடிவி தினகரன் கடும் விமர்சனம் செய்துள்ளார்
- Advertisement -