உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ”ஏர்பஸ் பெலுகா” விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று (ஜூலை 24) சென்னை விமான நிலையம் வந்திருந்தது. இந்நிலையில், இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்ற முடியும் என விமான ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி, இதேபோல் எரிபொருள் நிரப்புவதற்காக முதல்முறையாகச் சென்னை வந்தது. தற்போது மீண்டும் குஜராத்திலிருந்து தாய்லாந்து செல்லும் வழியில் சென்னையில் எரிபொருள் நிரப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -