கோவை சரக டிஐஜி விஜயகுமார் அவர்கள், பந்தயச் சாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர் கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி ஆக மாற்றப்பட்டார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், இன்று காலை வழக்கமாக நடைப்பயிற்சி சென்று வந்த பின் காலை 6.50 மணிக்கு இந்த முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், இந்த தற்கொலை தொடர்பாக தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் முதற்கட்டமாக, அவர் கடந்த 2 தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக தகவல் வெளிவந்தது.
- Advertisement -