இயக்குநர் கெளதமராஜ் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ” கழுவேத்தி மூர்க்கனைக் கண்டேன். இயக்குநர் கௌதமராஜ் பிரசவித்த புரட்சிகர இளைஞன், சாதிவெறியை அறவே வெறுப்பவன். சனாதன நெறிகளைத் தகர்ப்பவன். நட்புக்காக உயிரையே கொடுப்பவன். நச்சரவான் எனில் தந்தையாயினும் தூக்கிலேற்றுபவன். அதிகார வெறி ஆணவத்தைக் கழுவேற்றிக் கழிசடை சக்திகளுக்குப் பாடம் கற்பிப்பவன்” என்றார் .
மேலும், அவர் ” இப்படத்தில் சட்டம்-ஒழுங்கு எனும் பெயரால் எப்போதுமே ஆதிக்க வெறியர்களைப் பாதுகாக்கும் காக்கி அதிகாரிகளால் களப்பலி ஆனவன். ‘பிறப்பொக்கும்’ என்னும் பேரறிவாளன் வள்ளுவனின் பெருமொழியை பெருங்குரலெடுத்துப் பேசுபவன். இயக்குநர் கௌதமராஜூக்கும் இளவல் அருள்நிதிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்” என ட்வீட் செய்து பாராட்டியுள்ளார்.
- Advertisement -