தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி அவர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதானதையும், இவருக்குச் சட்டவிரோத காவலில் தற்போது அமலாக்கத்துறை வைத்திருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்நிலையில், இதுகுறித்து, இன்று (ஜூலை 4) காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி, செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமலாக்கத்துறையின் கைது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கிய நிலையில், மற்றொரு நீதிபதி பரதசக்கரவத்தி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்து சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜியை 10 நாட்களுக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால், இந்த ஆட்கொணர்வு வழக்கை 3வது நீதிபதி விசாரணைக்காகத் தலைமை நீதிபதியிடம் அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -