காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால்,சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 163 கன அடியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவும் 12,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மேட்டூர் அணையின் நீர் வரத்தை விட வெளியேற்றும் அளவு அதிகளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் தற்போது 86.77 அடியாகக் குறைந்துள்ளது.
- Advertisement -