கடந்த சில தினங்களுக்கு முன் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகச் சென்னை உள்ளிட்ட பல வட மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழை சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடியக் கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளையும், சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 15 நிமிடங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இங்குக் காலையில் சற்று வெயில் தென்பட்ட நிலையில், தற்போது கரு மேகங்களுடன் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது
- Advertisement -