வளிமண்டல மேலடுக்கு காரணமாகத் தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை கொட்டி வருகிறது. இதனால், அப்பகுதியில் குளிர்ச்சி நிலவுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், கோவை, நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- Advertisement -