மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க திமுக அரசு திட்டமிட்டது. இதற்காக 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த பேனா நினைவுச் சின்னம் அமைப்பதைக் குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பும், ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு ஏற்கனவே அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து, கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 22) சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒன்றிய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இனி நினைவுச் சின்னம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்திருப்பதால் விரைவில் பணிகளைத் தொடங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -