கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வழக்கம் போல் வந்த இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த இரு பேருந்துகளில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், இந்த இரு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிய விபத்து குறித்து அங்குள்ள காவல்துறையினர் பயணிகளை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இரு தனியார் பேருந்துகளில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்றும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வந்தது. மேலும், இந்த விபத்து குறித்து நெல்லி குப்பம் போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -