நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதனால், சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது என்றும், தரமணியில் 14 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 13 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 10 செ.மீ, மேற்குத் தாம்பரம், குன்றத்தூர், நுங்கம்பாக்கத்தில் தலா 9 செ.மீ. மழைப் பதிவானதாகச் சென்னை வானிலை மையம் சற்றுமுன் அறிவித்தது.
- Advertisement -