- Advertisement -
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் சற்றுமுன் தெரிவித்தார்
மேலும், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நள்ளிரவு முதல் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மீனம்பாக்கத்தில் 73 ஆண்டுகளில், 2வது முறையாக அதிகபட்ச மழை (16 செ.மீ) பதிவானதாகவும், கடந்த 1996ல் 28.22 செ.மீ மழைப் பதிவானதே அதிகபட்ச மழை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.
- Advertisement -