வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் கூறியுள்ளது. மேலும், தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாகச் சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கே சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலர் அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மேலும் மழை நீடித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதேசமயம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) காலை 10 மணி வரை மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -