சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை , வேலூர் ஆகிய 6 மாவட்டங்களிலும் இன்று (ஜூன் 19) நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
இந்நிலையில், இந்த தொடர் மழையால் விடுமுறை விடப்பட்டாலும் மாநிலம் முழுவதும் திட்டமிட்டபடி இன்று (ஜூன் 19) +2 துணைத்தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
- Advertisement -