சென்னையில் இன்று (ஜூன் 19) பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியில் தற்போது 2,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. அதைப்போல், 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 180 ஜெட்ராடிங் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் தொடர்பான புகார் எண்: 044-4567 4567 தரப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த கனமழையால் சென்னையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மீனம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 16 செ.மீ. வரை மழைப் பதிவாகியுள்ளது. இனி மழைநீர் வடிகால் பணிகள், சாலை அமைக்கும் பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்பு முடிக்கப்படும். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் தவிர்த்து மற்ற இடங்களில் போக்குவரத்து எந்த இடையூறு இல்லை எனக் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா சற்றுமுன் பேட்டியளித்துள்ளார்