- Advertisement -
தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னை மாநகராட்சி துரிதமாகப் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், அவர் ” தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்குத் தமிழ்நாட்டின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்” என்றார். இதனால், மக்கள் கவனமுடன் இருப்பது நல்லது எனவும் தெரிவித்துள்ளார்.
- Advertisement -