கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் வழக்கம் போல் இரண்டு தனியார் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக இந்த இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை துரிதமாகச் செயல்பட்டுப் பல பயணிகளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பேருந்து ஓட்டுநர் அங்களாமணி, ஸ்ரீநிவாசன் உட்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.