- Advertisement -
கோவை மாவட்டம் வனச்சரகத்தில் உள்ள துடியலூர் பிரிவு, ஆனைக்கட்டி தெற்கு காப்புக் காட்டிற்கு வெளியே சுமார் 300 மீட்டர் தொலைவில் அரசு புறம்போக்கு நிலத்தில் நேற்று (ஜூன் 18) ஞாயிற்றுக்கிழமை மாலை பெண் காட்டு யானை ஒன்று மர்மமாக இறந்து கிடந்தது. இதை அங்கு ரோந்து பணியை மேற்கொள்ள வந்த களப்பணியாளர்கள் பார்த்து வனத்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து, இன்று (ஜூன் 19) கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் வனக் கால்நடை மருத்துவ அலுவலர்களால் இந்த இறந்த பெண் யானையைப் பிரேதப் பரிசோதனை செய்கிறார். மேலும், இந்த யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
- Advertisement -