வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவே சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (ஜூன் 19) 11 மணி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியுள்ளது. இதே போல் வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், அநேக சாலைகளில் மழை நீர் தேங்கியும், மரங்கள் முறிந்தும் இருக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், அலுவலகம் செல்லும் மக்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியிருந்தாலோ, மரம் முறிந்திருந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.
- Advertisement -