சென்னையில் இன்று விடிய விடியக் கொட்டிய கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைப்போல், மழைநீர் வடிகாலில் தண்ணீர் செல்வதை மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்துக் கண்காணிக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்குச் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் ” சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யத் தனிக் கவனம் செலுத்த வேண்டும். சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த உபகரணங்களுடன் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்” அடுக்கடுக்காக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- Advertisement -