தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, மூடப்படும் 500 மதுபான கடைகளைத் தயார் செய்த டாஸ்மாக் நிர்வாகம் அரசுக்கு இப்பட்டியலை அனுப்பியுள்ளதாகத் தகவல் வந்தது.
இந்நிலையில், இந்த மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் இறுதி செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகச் செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், ” தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும். அதற்கான பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்.
- Advertisement -