கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 2) ஆம் தேதி இரவில் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவில் உள்ள பாலசோரில் மிகப் பயங்கரமாக விபத்தானது. இந்த ரயிலில் பயணித்த தமிழர்களை மீட்கத் தமிழக அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசாவுக்குச் சென்றது.
இந்நிலையில், அங்கு மேற்கொண்ட ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இதில் குறிப்பிட்ட 6 தமிழர்களின் நிலை மட்டுமில்லை தெரியவில்லை எனச் செய்தி வெளியாகியது. இதுகுறித்து, இன்று (ஜூன் 5) சென்னையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது, ” இந்த ஒடிசா ரயில் விபத்தில் தகவல் தெரியாத 6 தமிழர்கள் தொடர்பாக நல்ல செய்தி விரைவில் வரும்” என நம்பிக்கையாகக் கூறினார்.
- Advertisement -