தமிழகத்தில் கடந்த மாதம் அனைத்து மாணவர்களுக்குத் தேர்வு முடிந்ததால் தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் கோடை வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பதில் மாற்றமாகுமா எனப் பலதரப்பினர் கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும், பள்ளிகள் திறப்புக்கு மாற்றப்பட்ட 2 தேதிகளைக் கொடுத்துள்ளோம். ஏனென்றால், வெயிலின் தாக்கத்தில் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என முதலமைச்சரிடம் தெரிவித்தோம். இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.