தமிழகத்தில் நேற்று (மே 25) அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 11 உறுப்பு கல்லூரியில் குறைந்த மாணவர்களின் சேர்க்கை உள்ள தமிழ் வழி பொறியியல் படிப்புகளைத் தற்காலிகமாக மூடப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இதற்கு பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழி பாடப்பிரிவுகள் மூடப்படாது என அண்ணா பல்கலை. அறிவித்தது.
இந்நிலையில்,உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், ” தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல் அண்ணா பல்கலைக்கழகம் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது என்றும், எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, தாய் மொழியில் படிக்க வேண்டியது முக்கியம்” என விளக்கமளித்துள்ளார்.