தமிழகத்தில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், ஜூன் 1ஆம் தேதியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், ஜூன் 5 ஆம் தேதியில் 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளி திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது தமிழக அரசு.
இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பு தேதிகளை மாற்றப் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறக்க மாற்றுத் தேதியை முதலமைச்சரே முடிவெடுப்பார் எனக் கூறினார். அதன்படி, இந்த கோடை விடுமுறைக்குப் பின் வரும் ஜூன் 7ம் தேதியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.