- Advertisement -
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏழ்மையான பெண்கள் அல்லது ஆண்களை தேர்வு செய்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம். அதில் 100 முதல் 200 திருமணங்கள் இதுவரை திருமணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்த இந்த 2 ஆண்டில் தமிழக அரசு சார்பில் செய்யும் திருமணங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இங்கு பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு, இந்த நடப்பாண்டில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும், இது கடந்த ஆண்டை விட100 திருமணங்கள் அதிகமாகும். இந்த திருமண இணைகளுக்கு 4 கிராம் தாலி, பீரோ, கட்டில் உள்ளிட்ட 50,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தனர்.
- Advertisement -