சென்னை மக்கள் அன்றாட பணிகள் போன்ற காரணங்களுக்காக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் புறநகர் மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை வழக்கமாக சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் பயணித்தது. அப்போது சைதாப்பேட்டை அருகே இந்த புறநகர் மின்சார ரயிலிலிருந்து 8 பெட்டிகள் திடீரென கழன்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதன் காரணமாக, இந்த ; சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான ரயில் சேவை சுமார் 30 நிமிடங்களாக நிறுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் தொழிலாளர்கள் தவித்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸ் விசாரணை நடத்தினர். இந்நிலையில், தற்போது நீண்ட நேரத்திற்கு பின் தாம்பரம்-சென்னை இடையேயான மின்சார ரயில் சேவை தொடங்கியதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது