விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கிராமத்தில் சுமார் 16 பேர் கள்ளச்சாராயம் அருந்தினர். இதற்கு பின்னர் அவர்களுக்கு வாந்தி , மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று (மே 15) 11 பேர் வரை சிகிச்சை பலனளிக்காததால் உயிரிழந்தனர், மீதி பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சிகிச்சை பெறுபவர்களின் நலன் விசாரித்து, மருத்துவர்களை நன்முறையில் சிகிச்சை அளிக்க கூறினார். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜவேல் (38) என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். இதனால், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வாகியுள்ளது