- Advertisement -
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு பலர் உயிரிழந்தும் மீதிபேருக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று விழுப்புரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கள்ளச்சாராய அருந்தியவர்களை நலம் விசாரித்து உள்ளார். மேலும், இந்த கள்ளச்சாராய தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த கள்ளச்சாராய விற்பனை செய்யப்பட்ட விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்ட மதுவிலக்கு பிரிவு காவல் கண்காணிப்பாளர்கள் ஸ்ரீநாதா, பிரதீப் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Advertisement -