- Advertisement -
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வு நிறைவடைந்தது. தற்போது இந்த மே மாதம் இறுதி வரை மாணவர்களுக்கு டை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், இதர பொருட்களை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டம் தீட்டியுள்ளது.
இதன் காரணமாக அச்சிடப்பட்டு தயாராக உள்ள நோட்டு, புத்தகங்கள் அனைத்தும் மாவட்டத்தோறும் விரைவாக அனுப்பி வைக்கப்படும். இதை கண்காணிக்க அந்தெந்த சம்மந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிற்பித்துள்ளது.
- Advertisement -