விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நேற்று முன்தினம் 16 பேர் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். அதில் இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இது ஓட்டுமத்த மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்காரணமாக அங்கு உள்ள எஸ்.பிக்களை பணியிடம் நீக்கம் செய்யப்பட்டும், இந்த கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனாலை கட்டுப்படுத்தவும், பல கள்ளச்சாராய வியாபாரிகளை கைது என பல நடவடிக்கைளை மேற்கொண்டது.
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் “மரக்காணம் மற்றும் சித்தாமூரில் விற்கப்பட்டது மனிதர்கள் அருந்தும் கள்ளச்சாராயம் அல்ல என்றும், அது தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டில் சாராயம் கிடைக்காத சூழல் உள்ளதால், சிலர் தொழிற்சாலைகளில் இருந்து விஷச்சாராயத்தை திருடி விற்கின்றனர் என பரபரப்பான தகவல் அளித்துள்ளார்.