- Advertisement -
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்து மரணம் நிகழ்ந்தது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ” கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராய மரணமே இல்லை என ஏற்கனவே கூறிருந்தார். ஆனால், கடந்த 2020ம் ஆண்டு 20 பேர் உயிரிழப்பு என NCRB அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி – பதிலில் நிகழ்ச்சியில் பதிவாகி இருந்தது.
இந்நிலையில் , விழுப்புரபுரத்தில் இன்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியிடம் NCRB அறிக்கையை சுட்டிக்காட்டி அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராய மரணம் பற்றி கேள்வி எழுப்பப்பட நிலையில், அதற்கான உரிய பதில் அளிக்காமல் எடப்பாடி பழனிச்சாமி மழுப்பியுள்ளார்
- Advertisement -