தமிழக ஊரக பகுதியில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் மின் விநியோகம் தேசிய சராசரி அளவைவிட அதிகமாக உள்ளதை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அரசு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கடந்த 2018-2019 ஆண்டில் தேசிய அளவில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்தது. அதே கடந்த 2021-2022ம் ஆண்டில், 0 மணி நேரம் 53 நிமிடங்களாக இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2018-2019 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரக பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த 2021-2022 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் மூலம் முதல்வர் ஸ்டாலினை பாராட்டினார்.