தமிழகத்தில் உள்ள விழுப்புரம் , செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் சுமார் 66 பேர் கள்ளச்சாராயம் குடித்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அதில் அவர், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஜிப்மரில் மொத்தம் 66 பேர் வரை தற்போது சிகிச்சை பெற்று வருதாகவும், இதில் 55 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
மேலும், அவர் கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை தொடர்ந்து கண்காணிக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்படுவார். அதைபோல், இனி சாராய காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் குறித்து கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.