தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் ஏற்பட்ட மோக்கா புயலால் காற்றின் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து கடந்த மே 14 ஆம் தேதியில் இந்த புயல் மியான்மரில் கரையை கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் காற்றில் சுத்தமாக ஈரப்பதம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து வெப்பம் இங்கு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் உள்ள சென்னை, வேலூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. தற்போது இன்று (மே 16) முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் சராசரியை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
மேலும், இன்றும் நாளையும் சென்னையில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. அதனால், அதிக வெப்பநிலை இருக்கும் பொழுது பொதுமக்கள் வெப்ப அழுத்தத்தால் (Heat Stress) பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்