சென்னை தியாகராயர் நகரில் (தி.நகர்) இருந்து மற்றும் மாம்பலம் ரயில்வே நிலையத்திற்கு இடையே ஆகாய நடை மேடை கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த நடைமேடையை தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
மாம்பலம் ரயில் நிலையத்திற்க்கு வரும் பயணிகள் தி.நகர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டி 570 மீட்டர் நீளம் மற்றும் நான்கு மீட்டர் அகலம் கொண்ட ஆகாய நடைமேடை கட்டப்பட்டது என்றும், இதில் மாற்றுத்திறனாளிகள் வசதியாக செல்ல தனி சக்கர நாற்காலி, தி.நகர் பேருந்து நிலையத்தை ஒட்டி நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடை மேம்பாலம் வர்த்தக பகுதியான தி நகரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டப்பட்டது என்றும், இதற்காக தமிழக அரசு 30 கோடி செலவு செய்துள்ளது என்றனர்.